எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
குறைக்கப்படாத விலை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்நாட்களில் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை உள்ளது. இதனைக் கொண்டு தேவையான கிலோமீட்டர் வரை வாகனத்தை செலுத்த முடியவில்லை.
இது தொடர்பாக உரியத் தரப்பினருக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருளின் தரம் குறித்து எங்களுக்கு உறுதியளிக்கப்படவில்லை.
எரிபொருள் விலையில் திருத்தம்
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 9 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
