காரும் பேருந்தும் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயம்
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ஆடம்பர பேருந்தும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது என மாரவில பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்தில் மாரவில வைத்தியசாலையின் மருத்துவரின் கால் முறிந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி மற்றும் பேருந்து பயணித்த பயணி ஒருவரின் காலும் முறிந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
பேருந்தும், காரும் வீதியின் நடுவில் நேருக்கு நேர் மோதியுள்ளன.வீதியில் இரண்டு புறமும் மழை நீர் நிரம்பி காணப்பட்டதால், இரண்டு வாகனங்களும் வீதியின் நடுவில் பயணித்துள்ளன.
வாகனங்கள் மோதுண்ட வேகத்தில் பேருந்து, வீதியில் இருந்த மரம் ஒன்றையும் உடைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் மதில் சுவரில் மோதி வீடொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
