நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் பலி
மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து, விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்தானது பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
22 பயணிகள் காயம்
மேலும், பேருந்து விபத்தில் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேபாளத்தின் லமாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
