நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் பலி
மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து, விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்தானது பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
22 பயணிகள் காயம்
மேலும், பேருந்து விபத்தில் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேபாளத்தின் லமாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
