முதியோர் இல்லத்தில் இருந்த பௌத்த துறவி அடித்துக் கொலை
குருநாகல், பமுனுகமவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பௌத்த துறவி ஒருவர், இல்லத்தில் இருந்த மற்றும் ஒருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த முதியோர் இல்லம், மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட முதியோருக்காக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இல்லத்தின் 73 வயதைக்கொண்ட ஒருவரால் துறவி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஜா-எலயைச் சேர்ந்தவர். மனநல குறைபாட்டால் இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, துறவி தடி ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.