நீர்கொழும்பில் விடுதியொன்று சுற்றிவளைப்பு - பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பகுதியில் பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று பெண்களும், விடுதியின் உரிமையாளரான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 46, 40 மற்றும் 21 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.