இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பெண் - மக்களிடம் உதவி கோரும் பொலிஸ்
காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா நிபந்தனைகளை மீறியதாக கூறி கடவுசீட்டை பறிமுதல் செய்தனர்.

ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட இந்த வெளிநாட்டுப் பெண், தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்போது, அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவர் அதிகாரிகளிடம் வருவார் என நம்பப்படுகின்றது.
மேலும், அவர் எந்த வகையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam