பிரித்தானிய பிரதமரின் முடிவு! கோட்டாபயவிற்கு முக்கிய தகவல்கள் பல
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இருப்பினும் புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமைச்சரவை தகுதி அமைச்சர்களில் முக்கியமான நான்கு பேர் பதவி விலகுவதாக அறிவித்ததன் பின்னர் அதன் அழுத்தம் காரணமாகவே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகியதாக அரசியல் விமர்சகர் சிவகுரு பிரேம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜோன்சனின் பதவி விலகலை அடுத்து இந்த கட்சியில் கடும் தலைமைத்துவ போட்டி ஒன்று நிலவும்.
இதேவேளை ஒரு கட்சியை கட்டுகோப்பாக நடத்த தெரியாததால் தான் போரிஸ் ஜோன்சன் தலைமைத்துவ நெருக்கடிக்குள் சிக்கி தற்போது பதவி விலகியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
போரிஸ் ஜோன்சனின் கடந்தகால தவறுகளுக்கான பலனாக தான் இந்த பதவி விலகலை பார்க்க முடிகின்றது. காரணம் கோவிட் தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படடன.
இதை ஒரு கொள்கை சார்ந்த பிரச்சினையாக பார்க்க முடியாது. மாறாக பிரதமருக்கு கீழ் பணியாற்ற முடியாது என்பதற்கான எதிர்வினைகளாகவே அமைகின்றது.
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam