இந்திய - இலங்கை பாலம்: கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி ஆலோசகர்
இந்திய - இலங்கை பாலம் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி (27.03.2024) புதன்கிழமை அவர் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சாகல ரத்நாயக்க பாலத்தின் கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புகையிரதப் பாதை
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய - இலங்கை பாலம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பாலம் கட்டப்படும் எனில், இரு நாடுகளுக்குமிடையிலான புகையிரதப் பாதையும் இந்த பாலத்தின் ஊடாக அமைக்கப்பட உள்ளது.

மேலும், இந்த பாலமானது இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு மற்றும் மக்கள் தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam