தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு: கபே அமைப்பு தகவல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய காலம் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் அமைதியானதாக இருந்தது.
எனினும், செப்டெம்பர் மாதத்திலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசாரம் (CAFFE) அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக செப்டம்பர் 08 முதல் செப்டம்பர் 14 வரை வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வன்முறை சம்பவங்கள்
அச்சுறுத்தல், அரசியல் கட்சி ஆதரவாளர்களைத் தாக்குதல் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை பதிவாகியுள்ளன என்று கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் போக்குகள் தொடருமானால், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அது பாதகமாக அமையும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசாரத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam