பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் பாணின் விலையும் 1790 ரூபா வரை அதிகரிக்கும்(Video)
பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை ஆயிரத்து 500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் செல்லும் பயணத்திற்கு டிசம்பர் மாதம் ஆயிரத்து 790 ரூபா செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதித பணவீக்கம் பயங்கரமானது

அதித பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது. இதனால், அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது.
இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது. மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரித்தால், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருளின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாவாக அதிகரிக்கும்.

பாணின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாவாக அதிகரிக்கும். இதனால், என்ன நடக்கும், இது அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan