இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை - சிக்கிய சகோதரர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சகோதரர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (18.02.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவலில் வைக்க உத்தரவு
இதன்போது குறித்த கொலை செய்வதற்கு உதவியதாக சந்தேககிக்கப்டும் குறித்த இரண்டு சகோதரர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபரான பொல்கசோவிட்ட திலாவையும் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது காரில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam