பசறையில் பாக்கு மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு
பதுளை (Badulla) - பசறையில் பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த 16 வயதுடைய சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை (08.09.2024) இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது தவறி மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவு
இதன்போது, சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடரந்து, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் சடலம், பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri