ட்ரோன் விமானத்துடன் இளைஞர் ஒருவர் கைது
சிறிய ரக ட்ரோன் விமானத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இந்த விமானத்தை பறக்க விட்ட குற்றச்சாட்டில், தெஹிவளை ரொபர்ட் பிளேஸ் பிரதேசத்தில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட இந்த இளைஞன் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இளைஞனிடம் இருந்த ட்ரோன் விமானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எதற்காக இந்த இளைஞன் ட்ரோன் விமானத்தை பறக்கவிட்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.