ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரி: 7 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சடலம்
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் 7 நாட்களுக்குப் பின்னர் நேற்று (06) கண்டெடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அதிகாரிபொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவில் வசிக்கும் நபர் எனவும், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றுபவர் எனவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
குறித்த அதிகாரி கடந்த 29ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சடலம் அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan