கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்! - நீதி கோரி யாழில் போராட்டம்
ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'கறுப்பு ஜூலை 23' நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?", "இன அழிப்புக்கு நீதி வேண்டும்", "அரசியல் கைதிகளை விடுதலை செய்", "வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam