கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்! - நீதி கோரி யாழில் போராட்டம்
ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'கறுப்பு ஜூலை 23' நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?", "இன அழிப்புக்கு நீதி வேண்டும்", "அரசியல் கைதிகளை விடுதலை செய்", "வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam