அறிவித்தலை ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

People Prisons Northern Province Tribute
By Independent Writer Nov 08, 2021 07:17 AM GMT
Report

சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு, கிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

இம்மாதம் 20ஆம் திகதி "மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்" என வடக்கு, கிழக்கு ஆயர்கள் கூட்டாக அறிவித்திருப்பது தமிழர் தாயகம் மீது அரசியல் தாகம் கொண்டவர்களை, மாவீரர்களைத் தியாகிகளாக ஆத்மீக ரீதியில் உணர்வுப்பூர்வமாக அர்ச்சித்து எழுச்சியோடு நினைவு கூருபவர்களை பல்வேறு சந்தேகத்திற்கும், வேதனைக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கி இருப்பதால் இவ்வறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

மே மாதம் 18ஆம் திகதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தம் உறவுகளை வடக்கு, கிழக்கு மக்களும், புலம்பெயர் தமிழர்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். அத்தினத்தில் அரசியல் நீதிக்கான அவசரத்தையும் வலியுறுத்திச் செயற்படுகின்றனர்.

கத்தோலிக்கத் திருச்சபை அருட்தந்தையர்களும் நினைவு கூர்தலில் துணிச்சலோடு முன் நின்று செயல்பட்டுக் கொள்கின்றனர். அதுமட்டுமல்ல முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார் தமிழர்களின் அரசியல் குரலாக ஒலித்தவர். இவரை தமிழர்கள் நன்றியோடு பார்க்கின்றனர்.

இந்நிலையில் மாவீரர் வாரம் என்பது இறந்தவர்களை நினைவு கூறும் காலம் அல்ல. தமிழர்களின் தாயக அரசியலுக்காக உயிர்த்தியாக மானவர்களை, தமிழர் தாயக மண்ணில் வித்தாகி தமிழர் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்து எமது அரசியலை இன்னும் கூர்மைப்படுத்துகின்ற தியாகிகளுக்குத் தியாகச் சுடரை ஏற்றி கௌரவப்படுத்துகின்ற வாரமாகும்.

இத்தகைய புனித வாரத்தின் முதல் நாள் இறந்தவர்களை நினைவு கூருவோம் என அழைப்பு விடுப்பது மாவீரர் குடும்பங்களையும், அவர்களைத் தியாகிகளென, புனிதர்களென நினைக்கின்றவர்களை மட்டுமல்ல மாவீரர்களையும் அவர்கள் எந்த அரசியலுக்காகத் தியாகமானார்களோ அந்த அரசியலையும் அவமதிக்கின்ற செயலுமாகும்.

தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் உயிர்த் தியாகிகள் ஆன அருட்தந்தையர்கள் போராட்டக் களத்தில் நின்றவர்கள் என நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் உள்ளனர். அதேபோன்று காணாமற்போன கத்தோலிக்கர்களும் உள்ளனர்.

இவர்களுக்காக நினைவு நாளை அறிவிக்காத திருச்சபை மாவீரர் வாரத்தின் முதல் நாள் நினைவு நாளாக அறிவித்தது ஏன்? தமிழர் தாயகத்தையும் தமிழர் தாயக தேசிய அரசியலையும் சிதைக்க  சர்வதேச சக்திகளும், உள்ளூர் சக்திகளும் கைகோர்த்து நிற்கின்ற காலம் இது.

தமிழர்கள் 30 வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொள்ளாத மாகாணசபையை முழுமையாக உட்படுத்துமாறு அழிவு சக்திகள் கூடுகின்ற காலங்களில், இன்னும் ஒரு பக்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என இனவாத காவியின் கையில் இன அழிப்பைத் தீவிரமாகத் திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில் இறந்தவர்களை நினைவு கூர மாவீரர் வாரத்தின் முதல் நாளை அறிவிப்பதன் மூலம் ஆயர்களும் எமக்கு எதிரான சக்திகளோடு மறைமுகமாகக் கைகோர்த்து எனது அரசியல் உணர்வையும் தியாக வரலாற்றையும் நீர்த்துப்போகச் செய்வதற்கான செயற்பாடுகளில் ஒன்றாகும் எனச் சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

அத்தோடு வேறு சமயத் தலைமைகளையோ, பொது அமைப்புக்களையோ கலந்துரையாடாது இத்தகைய பொது அறிவித்தலை விடுப்பது அவர்களை அவமதிப்பதாக அமைந்திருப்பதோடு தன்னிச்சையாக அறிவிப்பு செய்திருப்பது தமிழர்கள் மத்தியில் இன்னுமொரு பிளவையும் ஏற்படுத்தி விடலாம் என்பதையும் சிந்திக்கத் தவறியது வேதனைக்குரியது.

ஆதலால் மாவீரர் வாரத்தின் புனிதம், மாவீரர்களின் தியாக வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் செயற்பாடு, தாயக அரசியலுக்கான கூட்டுச் செயற்பாடு என்பன கருதி "சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்" எனும் அறிவித்தலை வடக்கு, கிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US