அணு ஆயுத சோதனைக்கு பேரம் பேசிய பில் கிளிண்டன்: நவாஸ் ஷெரீப் பரபரப்பு தகவல்
அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக பில் கிளிண்டன் 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார். ஆனால் அவற்றையும் மீறி 1998ஆம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பதிலடி
இதன் போது அவர் மக்களுக்கு மேலும் கூறியதாவது,
“பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான்.
இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன ”என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிந்த நிலையில் வாடகை விமானம் மூலம் அண்மையில் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.




