துவிச்சக்கரவண்டியில் சென்றவர் லொறி மோதி மரணம் - சாரதி தப்பியோட்டம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் இன்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.
வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண் லொறி பிரதான வீதியால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.



அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri