நாடாளுமன்றிற்கு மக்கள் என்னையே தெரிவு செய்துள்ளனர்! பாரத் அருள்சாமி
கண்டி மாவட்ட தமிழ்ப் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தகுதியானவன் நான் என்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி (Bharath Arulsamy) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், "கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் அதிகமான விருப்பு வாக்கு எனக்கே கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் கண்டி மாவட்ட தமிழ்ப் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தகுதியானவன் நான் என்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர்.
நான் போட்டியிட்ட கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே கண்டி மாவட்டத்தில் என்னால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியவில்லை. இருந்தாலும் எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கின்றது.
எங்களுடைய நோக்கம் இரண்டாம் கட்ட இளம் அரசியல் தலைமைகளை உருவாக்குதல். எதிர்வரும் காலங்களில் எம்மைப்போல திறமையான அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மும்முரமாக செயற்பட்டு கண்டி மாவட்டத்தில் தமிழ் அரசியலை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
