நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும்! மகிந்த
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சூழ்நிலை நன்றாக இருப்பதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தாம் ஏற்கனவே அனுபவித்துவிட்டதாகவும் அதனால் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழ்நிலை
ஒட்டுமொத்த நாடே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சியானது எதிர்க்கட்சியை சிக்க வைக்கும் ஓர் திட்டமாகவும் இருக்கலாம்.
இரு தரப்பு உறவு
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யார் என்பது தமக்கு நன்றாக தெரியும் என ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தமது வேட்பாளர் வெற்றியீட்டுவார் எனவும் சரியான தருணத்தில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா போன்ற நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜே.வி.பி புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
