சுவிஸர்லாந்தில் ஞானலிங்கேச்சுரம் கோவிலுக்கு சென்ற முதலாவது பெண் முதல்வர்!

Switzerland World Tamil
By DiasA May 26, 2025 04:38 PM GMT
Report

சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு அந்நகரின் முதல்வர் மரீக்கே குரூயிட் சென்றுள்ளார்.

இன்று திங்கட்கிழமை, அவர் முதல்வராக பொறுப்பேற்று அரை ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் மரீக்கே குரூயிட், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு சென்றுள்ளார்.

இவரது வருகை தமிழர் சமூகத்தின் பண்பாட்டு மதிப்புகள், சமய வழிபாடு, சமூகநல உணர்வுகள் ஆகியவற்றின் அங்கீகாரமாகவும், சுவிஸ் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் தமிழர்களின் இடத்தை உறுதிப்படுத்தும் தன்மையாகவும் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வரவேற்பு

இதன்போது மரீக்கே குரூயிட்கு கோவிலில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளன.  

இது தமிழர் கோவில்கள் சுவிஸ் சமூகத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மதநம்பிக்கைகள், பண்பாட்டு பங்களிப்புகள் மற்றும் சமூக உறவுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.   

சுவிஸர்லாந்தில் ஞானலிங்கேச்சுரம் கோவிலுக்கு சென்ற முதலாவது பெண் முதல்வர்! | Bern S First Woman Chief Minister Visits Temple

இதன்போது, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், புதிய முதல்வரிடம் உரையாற்றியபோது, சுவிஸில் வாழும் தமிழர்களின் வாழ்வியல், சமூக தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் சீர்த்திருத்த அன்புவழி மீளெழுச்சி சைவம் நகர முதல்வருக்கு விளக்கப்பட்டுள்ளது.

அறுகம் குடா பிகினி தடை! சுற்றுலாத் துறை அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

அறுகம் குடா பிகினி தடை! சுற்றுலாத் துறை அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கருவறையில் தமிழ் வழிபாடு, சாதிமறுப்பு, பெண்களும் செந்தமிழ் அருட்சுனையர்கள் ஆகலாம் எனும் சைவநெறிக்கூடத்தின் கொள்கை நகர முதல்வருக்கு விளக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சுவிஸ் நாட்டில் குடிமக்களாக அனைத்து உரிமைகளையும், கடமைகளையும் முழுமையாக பின்பற்றிக் கொண்டு வாழ்கின்றனர்.

எமது சமூக பண்பாட்டு, மொழி மற்றும் சமய விழுமியங்களை மாநகராட்சி, மாநிலம் ஆகியவை வெளிப்படை உள்ளத்துடன் மதித்து வரவேற்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

பல்சமய இல்ல நிர்வாகிகள் பங்கேற்பு 

தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் பல்லினப் பல்பண்பாட்டுக்குள் இசைவுடன் வாழ்வது கடினமல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் கூறுகையில், உரையாடல், புரிதல், மதிப்பு ஆகியவை சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைய வேண்டும். உரையாடல் ஊடாக முரண்களுக்கு தீர்வு எட்டுவதற்கும் நிபந்தனை அற்ற மதிப்பு - புரிந்துணர்வு தேவையாகும். இத்தேவை எமது தாயத்து தமிழர்களுக்கு இப்போதும் உள்ளது.

சுவிஸர்லாந்தில் ஞானலிங்கேச்சுரம் கோவிலுக்கு சென்ற முதலாவது பெண் முதல்வர்! | Bern S First Woman Chief Minister Visits Temple

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த காலத்திலும், இன்று போலவே, முன்னாள் நகர முதல்வரும், தைப்பொங்கல் மற்றும் தேர்த்திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்றுள்ளனர்.

மரீக்கே குரூயிட் தனது நகரமுதல்வர் பொறுப்பின் தொடக்க காலத்திலேயே பேர்ன் நகரத்தில் வாழும் தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் சமூக மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பை அங்கீகரித்துள்ளமை, மிகப் பெரிய சிறப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் மந்திர கோலால் மயங்காத ரணில்! மந்திரவாதிகள் வழங்கிய சக்தி

மகிந்தவின் மந்திர கோலால் மயங்காத ரணில்! மந்திரவாதிகள் வழங்கிய சக்தி

இந்த நிகழ்வில், பல்சமய இல்லத்தின் நிர்வாக சபைத் தலைவர் யோஹன்னெஸ் மாத்யாஸ் , துணைத் தலைவர் காபி க்னொக்-முண்ட், உறுப்பினர்கள் நிக்கோலா வொன் க்ரெயெர்ஸ், ஆன் மன்னென் ,இணை நிர்வாக இயக்குநர்கள் கறின் மிக்கிட்யுக், லூயிஸ் கிராஃப் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.    

மரீக்கே குரூயிட் 

சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மரீக்கே குரூயிட் நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.

முதல்வராக பொறுப்பேற்ற மரீக்கே குரூயிட் முன்னாள் முதல்வர் அலெக்ஸ் பொன் கிராப்பென்‌ரீட், இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகினார்.

சுவிஸர்லாந்தில் ஞானலிங்கேச்சுரம் கோவிலுக்கு சென்ற முதலாவது பெண் முதல்வர்! | Bern S First Woman Chief Minister Visits Temple

அவர் இந்த முடிவை கடந்த தேர்தலில் பெற்ற வாக்குச் சீற்றங்களை முன்வைத்து, முற்போக்கான முறையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அவரது நீக்கம் பின்னணியாக நகரத்தின் அரசியல் திசையில் புதிய மாற்றம் ஏற்பட்டது.

அமைதியான தேர்தல் முறையின் வாயிலாக, மரீக்கே குரூயிட், பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவியேற்பு அன்று அவர் கூறியதாவது: “இப்போது நகரத்தலைவராக ஒரு பெண் இருப்பது நேரத்தின் தேவை. எனது பதவியை மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் ஏற்கிறேன். பேர்ன் நகரத்தை உரையாடலின் மூலம் முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை ஏற்கிறேன்.”

மரீக்கே நெதர்லாந்தில் பிறந்து சுவிஸ் நாட்டில் குடியேறிய ஒரு வெளிநாட்டவர் குடும்பத்தில் வளர்ந்தவர்.

முள்ளிவாய்க்கால் எழுச்சியை தடுப்பதற்கு இரகசியமாக நடந்த Jammer தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் எழுச்சியை தடுப்பதற்கு இரகசியமாக நடந்த Jammer தாக்குதல்!

தூர்பாக் என்ற கிராமத்தில் வளர்ந்த மரீக்கே 12வது வயதில் சுவிஸ் குடியுரிமை பெற்றார். வணிகத் துறையில் தொழிற்கல்வி முடித்த பின்னர் உளவியலாளராக பயிற்சி பெற்றார்.

உள்நலத் துறையில் பல பொறுப்புகளை வகித்த இவர் 2012ஆம் ஆண்டு நகர சபையில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகத் துறையில் மக்களின் நம்பிக்கையை வென்ற முக்கிய தலைவர் ஆனார்.       

மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US