நிலவும் மழையுடனான காலநிலை: அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை
நுவரெலியாவில் மழையுடனான காலநிலை நிலவுவதால் வீதி விபத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் வீசும் கடும் காற்று காரணமாக மரத்தின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகின்றன.
வாகனசாரதிகள் அவதானம்
வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் காணப்படும் வேளையில் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
மேலும், தங்களுக்கு உரித்தான பக்கத்தில் பயணிப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் அறிவுத்தியுள்ளனர்.
இரவு நேரங்களில் மழையுடன் கடும் காற்று வீசுகின்றமையால் மரங்களுக்கு சமீபமாக இருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த எச்சரிக்கை
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே அபாயம் நிறைந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri
