மட்டக்களப்பில் வாகன விபத்து: வயோதிபர் படுகாயம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (04.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு காயமடைந்த வயோதிபர் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் லொறியின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri