மீண்டும் சுற்றிவளைக்கப்படும் மட்டக்களப்பு: விரைவில் பலர் கைது
மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் திரிப்போலி ப்ளட்டூன் முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்டையில் பல குழுக்களாக இயங்கியதாக தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பிள்ளையானுடன் தொடர்புடையதாக பார்க்கப்படும் திரிப்போலி ப்ளட்டூன் அமைப்பில் இராணுவபிரிவின் முக்கியஸ்தர்கள் இருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்களினால் இந்த அமைப்பு இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் இனிவரும் நாட்களில் ஓட்டடாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, செங்கலடி, கிரான்,மட்டக்களப்பு நகர்பகுதிகளில் விரைவான கைதுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....




