மட்டக்களப்பு - சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..!

Batticaloa Government Of Sri Lanka Sri Lankan Peoples NPP Government
By Kumar Jul 07, 2025 03:00 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்டம் கடந்த நல்லாட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....

இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....

 சட்ட விரோத செயற்பாடுகள்

நல்லாட்சிக்காலத்தில் முறையான தெரிவுகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த பகுதியில் 139க்கும் அதிகமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் 30 வீடுகளிலேயே மக்கள் குடியிருப்பதாகவும் ஏனைய வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு - சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..! | Batticaloa People Issue Npp Government

வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலம் தொடக்கம் முறையான வீதிகள், குடிநீர்வசதிகள்,வடிகான் வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதி மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பெருமளவான வீதிகள் மணல் வீதிகளாக காணப்படுவதனால் போக்குவரத்துச்செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடல் அருகில் காணப்படும் நிலையில் சுனாமி போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படும்போது கடல் பகுதியை நோக்கியே ஓடும் நிலை காணப்படுவதாகவும் மாற்றுவழி இல்லாத நிலையே உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புன்னைக்குடா-பாலமீன்மடு பிரதான வீதியை ஒட்டியதாக சத்துருக்கொண்டான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் தமது வீடுகளுக்கு வந்து வதிவதற்கு தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் கோடீஸ்வரர் கொலை : சிக்கிய பாடசாலை மாணவன்

இளம் கோடீஸ்வரர் கொலை : சிக்கிய பாடசாலை மாணவன்

அச்சத்தில் மக்கள் 

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையில் பொதுப் போக்குவரத்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிரதான வீதியில் செல்லுவோரை நிறுத்தி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலைமையே காணப்படுவதாகவும் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு வேறு நபர்களுடன் அனுப்பிவிட்டு அச்சத்துடனேயே இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு - சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..! | Batticaloa People Issue Npp Government

அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் குறித்த பகுதியில் நிலவும் தற்காலிக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக வீதிகளை புனரமைப்பதற்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இங்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று கைவிடப்பட்ட வீடுகளின் மீளகுடியமர்த்தவும் அப்பகுதியில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்தார்.

அத்துடன், எதிர்வரும் வரவு செலவு திட்டம் ஊடாக நிரந்தரமான வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா - மினாநகர் மக்கள்

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா - மினாநகர் மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US