இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....
இராணுவ புலனாய்வாளர்கள் பகிரங்கமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியம் சார்பாக இயங்கிய மாணவர்களின் பெயர்களை மரண தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார்கள் என்று வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த இராணுவக் கொடுமைகளை எந்தவித சர்வதேச ஸ்தாபனங்களினாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தற்போது தென்படக்கூடிய மனிதபுதைகுழிகள் இலங்கை அரசினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை.
அதனை இராணுவத்தின் போர்க்குற்றமாக கூறிவிட்டு ஓரிரு இராணுவத்தின் பெயர்களை குறிப்பிட்டு விட்டு கடந்து சென்று விட முடியாது” என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri