ஊடக அடையாள அட்டையை காட்டவும்: ஊடகவியலாளர் சசியை அனுமதிக்கமாட்டேன்! பிள்ளையான் பிடிவாதம் (Video)

Batticaloa S. Viyalendiran Sivanesathurai Santhirakanthan Journalists In Sri Lanka
By Dias Aug 31, 2023 03:47 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(31.08.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தென்னிலங்கையில் இருந்து வரும் பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க, அமைச்சர்கள் யார் வருகைத்தந்தாளும் கேள்வி கேட்கும் ஊடகவியலாளரை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் தடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சசி புண்ணியமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டையை காட்டவும்: ஊடகவியலாளர் சசியை அனுமதிக்கமாட்டேன்! பிள்ளையான் பிடிவாதம் (Video) | Batticaloa Journalists Issue

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  ஊடகவியலாளர்கள் ஆகியோர் வெளியில் செல்வதினை அவதானித்துள்ளனர்.

ஊடகவியலாளர்  சசி புண்ணியமூர்த்தியுடன் கலந்தாலோசித்து  மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அபிவிருத்தி குழு தலைவரிடம் கேள்வி

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மற்றும் சசி புண்ணியமூர்த்தி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் கேள்வி எழுப்பியபோது ‘‘சசி புண்ணியமூர்த்தி என்பவர் ஒரு ஊடகவியலாளர் இல்லை அதன் காரணமாகவே அவரை நாங்கள் அனுமதிக்கவில்லை'' என சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 2023, 2024 ஆம் ஆண்டுக்காண ஊடக அடையாள அட்டை இருப்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படலாம் என்று மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், 2021, 2022 தகவல் திணைக்கள அடையாள அட்டை உள்ளவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் கூட்டத்துக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட சசி புண்ணியமூர்த்தி மட்டும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் சசி புண்ணியமூர்த்தி கேள்வி எழுப்பிய போது, கடந்த மாதம் நடந்த கூட்டத் தொடர் ஒன்றில் கிழக்கு மாகாண ஆளுநரை ''மிஸ்டர் கவர்னர்'' என்று கூப்பிட்டதாகவும் இலங்கையின் பிரதம மந்திரியிடம் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பாகவும் 13-வது திருத்தச் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியதன் காரணமாக சசி புண்ணியமூர்த்தி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்ற முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடக அடையாள அட்டையை காட்டவும்: ஊடகவியலாளர் சசியை அனுமதிக்கமாட்டேன்! பிள்ளையான் பிடிவாதம் (Video) | Batticaloa Journalists Issue

எனினும் தகவல் திணைக்கள அடையாள அட்டை தொடர்பில் பார்க்க வேண்டிய பொறுப்பு இலங்கை தகவல் திணைக்களத்துக்குறியது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைகள அதிகாரி 10 வருடமாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பல ஊடகங்களுக்கும் செய்தி அனுப்பி கொண்டு வருகின்ற செயற்பாடு இந்த ஊடகவியலாளர்கள் அனுமதிக்க படாதவைக்கான காரணமாக இருக்கின்றது என பல முறைப்பாடுகள் அண்மை காலங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.


ஆகவே 2021 ஆம் ஆண்டு தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியுமாக இருந்தால் சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி வழங்காததிற்கான காரணம் என்ன என குறித்த ஊடகவியலாளர் வினா எழுப்புகிறார்.

ஊடக அடையாள அட்டையை காட்டவும்: ஊடகவியலாளர் சசியை அனுமதிக்கமாட்டேன்! பிள்ளையான் பிடிவாதம் (Video) | Batticaloa Journalists Issue

எமது நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருக்கும் ஊடகவியலாளர்களை அடக்க நினைக்கும் இராஜாங்க அமைச்ச சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்திற்கும் எதிராக எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,10 வருடத்திற்கு மேலாக ஊடகவியலாளர்களை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சிவனேசதுரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர் ஒருவரை ஊடகவியலாளர் இல்லை என்ற கூறும் கருத்துக்கும் பலர் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US