மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க அதிபரினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிவாரண உதவிகள் இன்று (13.01.2024) ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இடைத்தங்கல் முகாம்கள்
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலை கணேசா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களை சேர்ந்த 255 நபர்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




