போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், வர்த்தக இராஜாங்க அமைச்சரும் போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு,கடந்த வெள்ளிக்கிழமை(02.02.2024) மாலை வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகிய இக்குழுக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விஷேட கலந்துரையாடல்
மேலும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிரதேசத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும், மிக முக்கியமாக "உடன் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள்" குறித்தும் மிக விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக வீதிஅபிவிருத்தி, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம், வாழ்வாதாம், சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்தோடு கலந்துரையாடலில் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கிராமங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்து கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri