தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் மட்டக்களப்பு மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயோதிபர்களுக்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இன்றைய தினம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுகக்ப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெருமளவானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு வருகைதந்ததை காணமுடிந்தது.