ஜனாதிபதி பதவிக்கு பசில் தகுதியுடையவர்! – திஸ்ஸகுட்டியாரச்சி
இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தகுதியுடையவர் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பசில் ராஜபக்ச என்பவர் தெளிவாகவே இந்த நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிக்கு எதிர்காலத்தில் தகுதியுடையவர்.
இன்று சிலர் அவரை விமர்சனம் செய்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியை உருவாக்கி இன்று பதவி வகிக்கும் அரசாங்கத்தை உருவாக்கிய பெருமை அவரைச்சாரும்” என தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ராஜபக்ச குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பக்கபலமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan