அமெரிக்காவில் இருந்து விரைவில் அழைத்துவரப்படுவார் பசில் : அதிரடி காட்டும் அமைச்சர்
அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சவை விரைவில் கொண்டு வந்து சட்டத்தை நிலைநாட்டுவோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை வழக்கு விசாரணைகளுக்கு பசில் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என்று கூறப்படும் சூழலில் பசிலுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....
செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam