அமைதிவழி போராட்டத்தின் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம் (Photos)
அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

”இலங்கைத் தீவில் எழுந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதற்குத் தீர்வு வேண்டி கடந்த ஒருமாத காலமாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவந்த கட்சி சார்பற்ற அமைதிவழிப் போராட்டத்தின் மீது நேற்று முன்தினம் காடையர்களை திட்டமிட்ட ரீதியில் ஏவி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழர்களாகிய நாங்கள் இவ்வாறான நிலைமைகளை கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் உங்கள் வலிகளை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.

வன்முறை மற்றும் ஒடுக்கு முறை சார்ந்து, பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் அபாயகரமான முறைமையை இல்லாது செய்ய அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும் என கோரி நிற்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan