ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்து பங்களாதேஷின் புதிய திட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி இந்திய அரசாங்கத்துக்கு பங்களாதேஷ் கடிதம் எழுதியுள்ளது.
குறித்த கடிதமானது நேற்றையதினம்(22) எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், கடிதத்தில் உள்ள தகவல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
நாடு கடத்த திட்டம்
கடந்த ஆண்டு ஜூலை - ஓகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு கடந்த (17) ஆம் திகதி நடாத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் உடனடியாக எமது நாட்டிற்கு அனுப்புங்கள் எனவும் பங்களாதேஷ் கோரியுள்ளது.
இதேவேளை, ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டு அரசாங்கம் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam