இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைநீக்கத்தை மீள ஆராயப்போவதில்லை: அரசாங்கம் அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீளஆராயப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக விதிக்கப்பட்டதடையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார்.
எனினும் கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதனை கண்டித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தடை நீக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு படையுடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என தெரிவித்துள்ள அவர், விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், எனினும் இதனை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே செய்துள்ளோம் அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
