பிரேசிலில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த பலூன்! 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
பிரேசிலின் பிர்யா கிராண்டே நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் எயர் பலூன் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தப் பலூனில் மொத்தம் 21 பேர் பயணித்ததாகவும், இதில் பைலட் உட்பட 13 பேர் உயிர் தப்பியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலூனின் கூடையில் இருந்த மாற்று எரிவாயு தீப்பிடித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை அதிகாரிகள்
குறித்த விபத்தில் உயிர் தப்பியவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலூன் 1,000 மீட்டர் (3,280 அடி) உயரத்தை எட்டியதால், அதன் எதிர்பார்க்கப்பட்ட பறக்கும் நேரம் 45 நிமிடங்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பயணத்திற்கு ஒரு பயணிக்கு 550 ரியாஸ் (சுமார் $100) செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri