ஆயிரக்கணக்கான வாகன இலக்கத்தகடுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், இவ்வாறு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காரணம்
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இதுவரை 15 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.