ருதுராஜ் மற்றும் நடராஜனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு! தமிழக வீரர் வெளியிட்ட கருத்து
விரைவில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) மற்றும் நடராஜன் (Natarajan) ஆகியோர் அணியில் இடம்பிடிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி (Lakshmipathy Balaji) தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நடராஜன் ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பிடித்திருக்கவில்லை.
பாலாஜி கருத்து
இறுதியாக நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த போதும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் போது, அவர்கள் விரைவில் அணியில் இடம்பிடிப்பார்கள் என பாலாஜி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாலாஜி நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எடுக்கப்படாத தீர்மானம்
எனினும், இது தொடர்பில் தானும் இந்திய அணி நிர்வாகமும் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு20 போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri