இலங்கை வந்த இந்திய அணி: இணைந்த புதிய உப பயிற்றுவிப்பாளர்
புதிய பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய துணை பயிற்றுவிப்பாளர் அபிஷேக் நாயருடன் இலங்கை வந்தடைந்த இந்திய அணிக்கு சிறப்பான முறையில் வரவேற்களிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக 3 இருபதுக்கு20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
இருபதுக்கு20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு நாள் தொடரின் தலைமையை ரோஹித் சர்மா தொடர்வார்.
அபிஷேக் நாயர்
அதேவேளை, இந்திய அணியின் புதிய துணை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Indian Cricket Team left for Sri Lanka!#TeamIndia #GautamGambhir pic.twitter.com/bsKvUPpBpW
— Sportz Tube (@sportztube30) July 22, 2024
1983ஆம் ஆண்டு பிறந்த அபிஷேக் நாயர் ஐபிஎல் உட்பட பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் ஆலோசகராகவும் சிறப்பான முறையில் செயற்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிண்ணத்தை வென்ற கொல்கத்தா அணிக்கும் இவர் துணை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அபிஷேக்கின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்ததாக அந்த அணியின் வீரர்கள் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
