சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் அரிசி உற்பத்தியாளர்கள்
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகளே அரிசி கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், "சீரற்ற காலநிலை காரணமாக அறுவடை செய்வதற்கு தயார்நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி தற்பொழுது முளைக்க ஆரம்பித்துள்ளன.
அரிசி கொள்வனவு
விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இது தொடர்பாக விவசாய காப்புருதி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நோய்த்தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்நிலங்களை பார்வையிட்ட அதிகாரிகள் உரிய வகையில் தமக்கான அழிவிற்கு இலப்பீடு வழங்கவில்லை.
ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வைப்பிளிடப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.
இம்முறையும் பாரிய அளவிலான அழிவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஆகிய நாங்களும் தற்பொழுது அரசியை கடையிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
இம்முறையாவது விவசாய காப்புருதி கூட்டுத்தாபனம் உரியவகையில் பார்வையிட்டு எமக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியாக நெற்செய்கை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர்” என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
