25 வயதான நபரின் மோசமான செயல் - பொலிஸாரால் கைது
நான்கு வயது சிறுவன் ஒருவரை மது அருந்துமாறு வற்புறுத்தி அதனை வழங்கிய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் மதுபானம் அருந்தும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே நேற்று குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியர் அருந்தக் கொடுத்த இளைஞருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இந்த நான்கு வயதான சிறுவனுக்கு பியர் மதுபானத்தைப் பருக கொடுத்துள்ளதுடன், அதனைச் சிலர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.