தென்னிலங்கையில் முன்னணி பாடசாலையொன்றின் மாணவர்கள் செய்த மோசமான செயல்!
தென்னிலங்கையின் ஹொரன பகுதியில் உள்ள முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பல கடைகளுக்குள் பிரவேசித்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களால் திருடப்பட்ட கணினிகளுக்குள் அவர்கள் பதிவு செய்த ஏராளமான ஆபாச காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
16 வயதான இந்த மாணவர்கள் எட்டு கடைகளை உடைத்து 4 மில்லியன் ரூபா மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களை திருடியுள்ளனர்.
இந்த மூன்று மாணவர்களும் நேற்று இரவு (15) கோடரியுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்கள், திருடப்பட்ட கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களை பொலிஸார் மீட்டனர்.
கொள்ளையிடப்பட்ட கணினிகளுக்குள் இருந்த பல ஆபாச நிர்வாண காணொளிகளில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் நண்பிகளான சிறுமிகளின் காணொளிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கூருவதோட்ட ஹொரான, இங்கிரியா மற்றும் புலத்சின்ஹல பகுதிகளிலேயே மாணவர்கள் பொருட்களை திருடியுள்ளனர்.
ஹொரன நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.