புத்தர் சிலைக்கு அடியில் இருந்து ஆண் சிசு உயிருடன் மீட்பு
கண்டி, வத்தேகம - எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகிலிருந்து ஆண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த புத்தர் சிலைக்கு அடியில் இருந்து குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் ஆண் சிசு மீட்பு
புத்தர் சிலைக்கு அடியில் ஆண் சிசு ஒன்று உயிருடன் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் குழந்தையைப் பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this Video
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 மணி நேரம் முன்
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லா! சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு - குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈரோஸ் அமைப்பு