புத்தர் சிலைக்கு அடியில் இருந்து ஆண் சிசு உயிருடன் மீட்பு
கண்டி, வத்தேகம - எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகிலிருந்து ஆண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த புத்தர் சிலைக்கு அடியில் இருந்து குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் ஆண் சிசு மீட்பு
புத்தர் சிலைக்கு அடியில் ஆண் சிசு ஒன்று உயிருடன் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் குழந்தையைப் பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this Video





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
