நடுக்கடலில் குழந்தை பிரசவித்த அகதிப்பெண்! வெளியான நெகிழவைக்கும் புகைப்படங்கள்
படகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு நடுக்கடலில் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொராக்கோ(Morocco) நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு(Spain) சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்பெயர்பவர்களுடன் படகொன்று பயணித்துக்கொண்டிருந்த போது படகில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
நெகிழவைக்கும் காட்சிகள்
சிறிது நேரத்தில் சக பயணிகளின் உதவியுடன் அழகான பெண் குழந்தையொன்று அந்தப் பெண்ணுக்கு பிறந்துள்ளது.
நடுக்கடலில், பிறந்த பிள்ளையுடன் அந்தப் பெண் படகில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தப் படகிலிருந்த 14 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 60 பேரையும் ஸ்பெயின் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
