சிறப்பாக நடைபெற்ற மடு அன்னை ஆலய ஆவணி பெருவிழா (Photos)
மன்னார் மருதமடு அன்னை ஆலய ஆவணி மாத திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித்பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்துள்ளனர்.
மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்! |
மடு திருத்தலத்திற்கு வருகை தந்த மக்கள்
இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணத்தில் மக்கள்
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்தனர்.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை
பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம்
அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ
ஒன்றியத்தின் ஸ்தாபகர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்ரு
பெர்னாண்டோ, அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல
பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின்
ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.