சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பெண்கள் பிணையில் விடுவிப்பு: 61 பேருக்கு விளக்கமறியல்
கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 85 பேரில் 12 பெண்களை சரீர பிணையில் செல்லுமாறும், 12 சிறார்களை விடுவிக்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள்
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (12.09.2022) குறித்த சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக சென்ற 85 பேரை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சரீர பிணையில் விடுதலை
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பெண்களை 175000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறும் 12 சிறுவர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 61 பேரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறிவியலில் வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.