யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம்
யாழ். மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கு பின் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்று(19.01.2026) வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!
வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவு
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் அப்போது ஆட்சியில் இருந்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்காமல் உள்ளன.

இதன் காரணமாக குறித்த பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவர நிலையில், மழை காலங்களில் இருப்பதற்கு இடம் இல்லாமல் இன்னல்களுக்கு முகங்கொடுப்பது வருடங்களாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
மக்களின் கோரிக்கை
தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியரிடம் பெற்ற வீடு திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சிகள் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகிறார்கள்.
இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமாரா திசாநாயக்க வீதியில் நடந்து திரிகிறார். ஆனால் யாழ். மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஆகவே, எமது பிரச்சனை தொடர்பில் வடமாகண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்கப்படவில்லையென்றால் எமது போராட்டம் தொடரும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைவு - 3.4 மில்லியன் மக்கள் தொகை சரிவு News Lankasri