அனுமதியில்லாத சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயற்சி
நம்பகமான தரவு இல்லாமல் சீனாவின் கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மருந்தாக்கல் கட்டுப்பாட்டாளரின் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களான நன்கு அறியப்பட்ட சுகாதார நிபுணர் வைத்திய கலாநிதி பாலித அபேகூன், மேலாண்மை நிபுணர் வைத்திய கலாநிதி கபில ரணசிங்க, கணக்கியல் நிபுணர் எம்.கே. ஹர்ஷனா கருணாரத்ன மற்றும் சட்டத்தரணி சமிண்திகா ஹெரத் ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவினால் மார்ச் 8 திகதியிட்டப்பட்டு கையெழுத்திட்ட பணிநீக்க கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த நான்கு பேருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam