யால தேசிய பூங்காவிலிருந்து 12,000 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி! அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மறுப்பு
யால தேசிய பூங்காவிலிருந்து 12,000 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கையை வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மறுத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், இதுபோன்ற எந்த திட்டமும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
ஒரு பொறுப்புள்ள அமைச்சராக, யால தேசிய பூங்காவில் இதுபோன்ற செயல்களை தாம் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற திட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதுவரை இதுபோன்ற எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார். இந்த விவகாரத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் அமைச்சராக, தாம், எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கூற்றை முற்றிலுமாக மறுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் , யால வனப்பகுதியில் யாரும் தலையிட அனுமதிக்கபோவதில்லை என்றும் கூறினார்.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam