ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு : இலங்கை மின்சார சபை கடும் மறுப்பு
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒருவரைத் தாக்கியதாகச் சில ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அந்தச் சபை முற்றாக மறுத்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குழுவினர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மையான தகவல்
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மின்சார சபை ஊழியர்கள் என அந்தச் செய்திகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்த சம்பவத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதில் ஈடுபட்டவர்கள் எவரும் மின்சார சபை ஊழியர்கள் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தவறான செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற புரிதல்கள் மற்றும் அதிருப்தி ஏற்படக்கூடும் என்பதால், உண்மையான தகவலைப் பகிருமாறு அவர் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam